search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சொல்வதெல்லாம் உண்மைதான் ஆனால் சாத்தியமாகுமா?- முத்தரசன்
    X

    சொல்வதெல்லாம் உண்மைதான் ஆனால் சாத்தியமாகுமா?- முத்தரசன்

    • ஒரே தீர்வு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சரியாக இருக்காது.
    • சாத்தியம் இல்லாத ஒரு திட்டத்தை மோடி திணிக்க பார்க்கிறார் என்றார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்று எழுந்துள்ள பிரச்சினை பற்றி இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

    அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால் கோடிக்கணக்கில் நிதி வீணாக செலவழிகிறது .அதிகாரிகள் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்துவதை விட தேர்தல் நடத்துவதில் தான் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பதெல்லாம் உண்மைதான்.

    இதற்கு ஒரே தீர்வு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சரியாக இருக்காது. ஏற்கனவே 1967 வரை ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தான் அமலில் இருந்தது .அதன் பிறகு தான் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டப்படி தேர்தலையும் நடத்தி முடித்து விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். சட்டமன்றங்கள் கலைந்தால் என்ன செய்வது? ஒருவேளை பாராளுமன்றமே கவிழ்ந்து போனால் என்ன செய்வது? இதற்கு தீர்வு என்ன? சர்வாதிகார நாட்டில் தான் இது சாத்தியமாகும். ஜனநாயக நாட்டில் சாத்தியம் இல்லை. ஆனால் சாத்தியம் இல்லாத ஒரு திட்டத்தை மோடி திணிக்க பார்க்கிறார் என்றார்.

    Next Story
    ×