search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் 25-ந்தேதி ஆர்ப்பாட்டம்- முத்தரசன் பேட்டி
    X

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் 25-ந்தேதி ஆர்ப்பாட்டம்- முத்தரசன் பேட்டி

    • மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தது.
    • மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகும்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தது. இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பாக வருகிற 25-ந்தேதி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×