என் மலர்
தமிழ்நாடு

X
முருகன்
வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம்
By
Suresh K Jangir9 Sept 2022 11:07 AM IST

- வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறுவதாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
- இன்று காலையில் முருகன் ஜெயில் உணவு சாப்பிடவில்லை.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதே வழக்கில் கைது செய்யப்பட்ட முருகனின் மனைவி நளினிக்கு பரோல் வழங்கப்பட்டு அவர் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். வேலூர் ஜெயிலில் முருகன் நேற்று உணவு சாப்பிட மறுத்தார். மேலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறுவதாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
இன்று காலையில் முருகன் ஜெயில் உணவு சாப்பிடவில்லை. 2-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
Next Story
×
X