என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தற்கொலை
கல்பாக்கம் அருகே குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று தாய் தற்கொலை
ஆட்டிசம் பாதிப்பால் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம்:
சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே உள்ள நெய்குப்பி பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது40). கட்டிட காண்டிராக்டராக உள்ளார். இவரது மனைவி கோடீஸ்வரி (32). இவர்களது 2½ வயது மகன் அரிகரசுதன். மேலும் இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர்.
பூபதியின் குழந்தை அரிகரசுதன் ‘ஆட்டிசம்’ எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் குழந்தையால் வாய்பேச முடியவில்லை. இதையடுத்து குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் பல்வேறு சிகிச்சைகளை எடுத்து வந்தனர்.
ஆக்குபேஷன் தெரபி எனப்படும் சிகிச்சையும் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் குழந்தையின் உடல் நலனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதற்கிடையே குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் இனி குழந்தை பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குழந்தையின் தாய் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.
குழந்தை பேசாததால் அதன் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற பயமும் அவருக்கு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
நேற்று கோடீஸ்வரி, குழந்தை அரிகரசுதனை வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டி அருகே எடுத்துச் சென்றார். அதன்பிறகு மனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தார். இதில் குழந்தை மூச்சுத்திணறி சிறிதுநேரத்தில் பரிதாபமாக இறந்தது.
குழந்தையை கொன்ற கோடீஸ்வரி பின்னர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். வீட்டுக்குள் சென்ற அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தாய் மற்றும் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கொன்று கோடீஸ்வரி தற்கொலை செய்தது தொடர்பாக அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கோடீஸ்வரியின் சகோதரர் ரமேஷ் சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது சகோதரி கோடீஸ்வரி மற்றும் அவரது குழந்தை அரிகரசுதன் ஆகியோர் சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறி உள்ளார்.
இதுதொடர்பாக கோடீஸ்வரியின் கணவர் பூபதி மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆட்டிசம் பாதிப்பால் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே உள்ள நெய்குப்பி பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது40). கட்டிட காண்டிராக்டராக உள்ளார். இவரது மனைவி கோடீஸ்வரி (32). இவர்களது 2½ வயது மகன் அரிகரசுதன். மேலும் இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர்.
பூபதியின் குழந்தை அரிகரசுதன் ‘ஆட்டிசம்’ எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் குழந்தையால் வாய்பேச முடியவில்லை. இதையடுத்து குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் பல்வேறு சிகிச்சைகளை எடுத்து வந்தனர்.
ஆக்குபேஷன் தெரபி எனப்படும் சிகிச்சையும் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் குழந்தையின் உடல் நலனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதற்கிடையே குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் இனி குழந்தை பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குழந்தையின் தாய் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.
குழந்தை பேசாததால் அதன் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற பயமும் அவருக்கு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
நேற்று கோடீஸ்வரி, குழந்தை அரிகரசுதனை வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டி அருகே எடுத்துச் சென்றார். அதன்பிறகு மனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தார். இதில் குழந்தை மூச்சுத்திணறி சிறிதுநேரத்தில் பரிதாபமாக இறந்தது.
குழந்தையை கொன்ற கோடீஸ்வரி பின்னர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். வீட்டுக்குள் சென்ற அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தாய் மற்றும் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கொன்று கோடீஸ்வரி தற்கொலை செய்தது தொடர்பாக அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கோடீஸ்வரியின் சகோதரர் ரமேஷ் சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது சகோதரி கோடீஸ்வரி மற்றும் அவரது குழந்தை அரிகரசுதன் ஆகியோர் சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறி உள்ளார்.
இதுதொடர்பாக கோடீஸ்வரியின் கணவர் பூபதி மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆட்டிசம் பாதிப்பால் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






