என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் நாளை மதுக்கடைகள் மூடல்
    X

    புதுவையில் நாளை மதுக்கடைகள் மூடல்

    • மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும்.
    • மீறுபவர்கள் மீது கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மை துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மிலாது நபியையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும்.

    அன்று அனைத்து மதுக் கடைகளிலும் மது விற்க தடை செய்யப்படுகிறது. மீறுபவர்கள் மீது கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×