என் மலர்
இந்தியா

ஆண்டின் முதல் Super Moon... இரவு வானில் ஒளிரும் முழு நிலவு!
- நிலவு சாதாரணமாகத் தெரியும் முழு நிலவைவிட சற்றே பெரியதாகவும், 30% வரை பிரகாசமாகவும் தெரியும்.
- நிலவின் ஈர்ப்பு விசை அதிகரிப்பதால், கடலில் அலைகள் சற்றே அதிகமாக எழும்.
இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் நிகழ்வு இன்றிரவில் தெரிகிறது. இந்தியாவில் பௌர்ணமி நாளான அக்டோபர் 6 இரவு தொடங்கி அக்டோபர் 7 அதிகாலை வரை சூப்பர் மூனைப் பார்க்க முடியும்.
முழு நிலவு பூமியை அதன் நீள்வட்டப் பாதையில் மிக நெருங்கி வரும்போது இந்தச் சூப்பர் மூன் நிகழ்வு ஏற்படுகிறது.
இதனால், நிலவு சாதாரணமாகத் தெரியும் முழு நிலவைவிட சற்றே பெரியதாகவும், 30% வரை பிரகாசமாகவும் தெரியும்.
இந்த நிகழ்வால் நிலவின் ஈர்ப்பு விசை அதிகரிப்பதால், கடலில் அலைகள் சற்றே அதிகமாக எழும். 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் இரு முறை இந்த சூப்பர் மூன் பௌர்ணமி நாளில் வானில் தென்பட உள்ளது.
Next Story






