search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி- போக்சோ சட்டத்தில் வேன் டிரைவர் கைது
    X

    கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி- போக்சோ சட்டத்தில் வேன் டிரைவர் கைது

    • கல்லூரிக்கு வந்த மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • கழிவறைக்கு சென்ற மாணவிக்கு அங்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி நிடாடா பகுதியை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண்.

    இவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், இவரது தூரத்து உறவினரான வேன் டிரைவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது இவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் மாணவி கர்ப்பமானார்.

    கர்ப்பிணியாக இருந்ததை மறைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கழிவறைக்கு சென்ற மாணவிக்கு அங்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    மாணவி பிரசவ வலியால் கதறிய சத்தத்தை கேட்ட சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அங்கு குழந்தையுடன் மாணவி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவியும் குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு வேன் டிரைவரை கைது செய்தனர்.

    Next Story
    ×