search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயலில் தூங்கியவரின் சட்டைக்குள் புகுந்த நாகப்பாம்பு
    X

    வயலில் தூங்கியவரின் சட்டைக்குள் புகுந்த நாகப்பாம்பு

    • வயல்வெளி ஒன்றில் இளைஞர் ஒருவர் தூங்கி உள்ளார்.
    • வாலிபரின் சட்டையில் இருந்து நாகப்பாம்பு நைசாக வெளியே இறங்கி செல்கிறது.

    வயல்வெளிகள், தோட்டம், பூங்காக்களில் காற்றுக்காக ஆசைப்பட்டு சிலர் தூங்குவதை பார்க்க முடியும். அது சில நேரங்களில் ஆபத்தாகவும் மாறிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பார்ப்பவர்களின் இதயத்தை உறைய வைக்கும் வகையிலான அந்த வீடியோவில் திக்திக் காட்சிகள் உள்ளன. அதாவது வயல்வெளி ஒன்றில் இளைஞர் ஒருவர் தூங்கி உள்ளார். அவருக்கு தெரியாமல் நைசாக ஒரு நாகப்பாம்பு அவரது சட்டைக்குள் புகுந்துள்ளது. பின்னர் திடுக்கிட்டு விழித்த அவர் அதிர்ச்சியில் உரைந்து போய் உள்ளார். சத்தம் போட்டால் பாம்பு கொத்தி விடும் என்ற பயத்தால் அவரால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அக்கம் பக்கத்தினர் அதை பார்த்து அவரது சட்டை பட்டன் ஒவ்வொன்றாக கழற்றுகின்றனர். அப்போது பதைபதைப்புடன் காணப்படும் அந்த வாலிபரின் சட்டையில் இருந்து நாகப்பாம்பு நைசாக வெளியே இறங்கி செல்கிறது. இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×