search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வள்ளியாற்றில் மூழ்கி சென்னை கூரியர் நிறுவன ஊழியர் பலி
    X

    வள்ளியாற்றில் மூழ்கி சென்னை கூரியர் நிறுவன ஊழியர் பலி

    • சென்னை மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.
    • சென்னை கூரியர் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

    மணவாளக்குறிச்சி:

    சென்னை மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 48).இவர் சென்னையில் ஒரு கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் குடும்பத்துடன் குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.நேற்று அவர் குடும்பத்துடன் கடியபட்டணம் வள்ளியாற்றில் குளிப்பதற்கு சென்றார். மனைவி மற்றும் 2 பிள்ளைகளும் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது குளித்து கொண்டிருந்த கோபாலகிருஷ்ணன் மூச்சு திணறி நீரில் மூழ்கினார்.உடனே அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்க்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார். இது குறித்து அவரது மனைவி அனந்த செல்வி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×