search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பூரண குணமடைந்த டி. ராஜேந்தர்.. நாளை சென்னை திரும்புகிறார்..
    X

    டி. ராஜேந்தர்

    பூரண குணமடைந்த டி. ராஜேந்தர்.. நாளை சென்னை திரும்புகிறார்..

    • டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் சமீபத்தில் அமெரிக்கா சென்றார்.

    இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய் வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு, மேல் சிகிச்சை பெற டி.ராஜேந்தர் கடந்த 14-ஆம் தேதி அமெரிக்கா சென்றார். இதையடுத்து சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவில் தங்கியிருந்த டி. ராஜேந்தர் தற்போது பூரண குணமடைந்துள்ளார்.


    டி. ராஜேந்தர்

    இந்நிலையில், இவர் நாளை அதிகாலை 2 மணியளவில் குடும்பத்துடன் சென்னை திரும்பவுள்ளார். . மேலும், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் கலையுலக நண்பர்களுக்கு டி.ராஜேந்தர் நன்றி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை சிம்புவின் 'மஹா' திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×