என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மனைவி மீது காரை ஏற்றிய வழக்கு.. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கைது..
    X

    கமல் கிஷோர் மிஸ்ரா

    மனைவி மீது காரை ஏற்றிய வழக்கு.. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கைது..

    • பாலிவுட் தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா மீது அவரது மனைவி யாஸ்மின் புகார் அளித்துள்ளார்.
    • போலீசார் புகாரின் அடிப்படையில் கமல் கிஷோர் மிஸ்ராவை கைது செய்தனர்.

    பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான கமல் கிஷோர் மிஸ்ரா 'சர்மா ஜி கி லக் கயி', 'தேஹாட்டி டிஸ்கோ', 'காலி பாலி' போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். இவர் மும்பை அந்தேரி பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். கமல் கிஷோர் மிஸ்ரா தான் வசிக்கும் கட்டடத்தின் கார் பார்க்கிங்கில் இருந்து காரை எடுக்கும் போது இவரின் மனைவி யாஷ்மின் இவரை தேடி கார்பார்க்கிங் பகுதிக்கு வந்துள்ளார்.


    கமல் கிஷோர் மிஸ்ரா

    அப்போது காரில் மாடல் அழகி ஒருவர் இருப்பதை பார்த்த யாஸ்மின் தனது கணவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த மிஸ்ரா காருடன் வேகமாக புறப்பட முயன்ற போது மிஸ்ராவின் மனைவி காரில் அடிபட்டு கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் சம்பவ இடத்தில் இருந்து மிஸ்ரா காரில் தப்பிச்சென்றுவிட்டார்.


    கமல் கிஷோர் மிஸ்ரா

    காயம் அடைந்த மிஸ்ராவின் மனைவி இது குறித்து அம்போலி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், விசாரணைக்கு பின்னர் அம்போலி போலீசார் கமல் கிஷோர் மிஸ்ராவை கைது செய்தனர்.

    Next Story
    ×