என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
லவ் டுடே பட இயக்குனரிடம் வாய்ப்பு கேட்ட பிரேம் ஜி
- பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அதன்பின்னர் லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் கடந்த வருடங்களில் படங்கள் மீது பல விமர்சனங்களை முன்வைத்து அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் தற்போது இணையத்தில் பகிர்ந்து பிரதீப்பின் பதிவுகளுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதன்பின்னர் இதுகுறித்து பிரதீப் விளக்கம் அளித்து பதிவிட்டார். அதில், என் பெயரில் பரவி வரும் பல பதிவுகளை போட்டோஷாப் செய்து வெளியிட்டுள்ளனர். ஒரு வார்த்தை யை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் என் முகநூல் கணக்கை நீக்கிவிட்டேன். எனக்கு எந்தக் கோபமும் இல்லை மாறாக என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதை காட்டியதற்கு நன்றி. அதேநேரம் சில பதிவுகள் உண்மையானவை. ஆனால் கசப்பான வார்த்தைகள் கொண்ட பதிவுகள் போலியானவை. வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கிறோம். என் தவறுகளை சரிசெய்ய முயற்சித்தேன். இன்னும் ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் பிரதீப் 2014ம் ஆண்டு அவருடைய குறும்படத்தை பகிர்ந்து இது என்னுடய குறும்படம் இதை நீங்கள் பகிர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று பிரேம்ஜியை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இவரின் இந்த பழைய பதிவை பகிர்ந்து இசையமைப்பாளரும் நடிகருமான பிரேம்ஜி அமரன், சார் உங்களுடைய அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரையும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sirrrr… Thankyou so much . It takes a lot of heart to post this . Means a lot . I want to make you say "Enna koduma sir idhu 😄❤️❤️❤️❤️" https://t.co/SA1SofB5Q0
— Pradeep Ranganathan (@pradeeponelife) November 17, 2022
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்