என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
என்னை தவறாக பயன்படுத்தினார்.. 14 மாதம் சித்ரவதை செய்தார்.. தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் புகார்
- கஜேந்திரா, குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் புளோரா சைனி.
- பிரபல தயாரிப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புளோரா சைனி புகார் தெரிவித்து உள்ளார்.
தமிழில் விஜயகாந்தின் 'கஜேந்திரா' படத்தில் அறிமுகமான புளோரா சைனி தொடர்ந்து குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புளோரா புகார் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும்போது, "நான் 20 வயதில் சினிமாவில் உயர்ந்த நிலையில் இருந்தேன். இந்தியில் 10 படங்களுக்கு மேல் நடித்தேன், விளம்பரங்களிலும் நடித்தேன். பின்னர் ஒரு தயாரிப்பாளரிடம் காதலில் விழுந்ததால் எனது வாழ்க்கை மாறிப்போனது. அந்த தயாரிப்பாளர் என்னை தவறாக பயன்படுத்தினார். கடுமையாக அடித்து காயப்படுத்தினார். எனது போனை பிடுங்கி கொண்டார்.
14 மாதங்கள் சினிமாவில் என்னை நடிக்க விடாமல் சித்ரவதை செய்தார். மற்றவர்களிடம் பேசவிடாமல் தடுத்தார். அவரிடம் நரக வேதனையை அனுபவித்தேன். இறுதியில் அந்த தயாரிப்பாளரை விட்டு ஓடிவந்து எனது பெற்றோருடன் சேர்ந்து விட்டேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்