search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலையில் முன்னேற்றம்.. குடும்பத்தார் தகவல்
    X

    பாம்பே ஜெயஸ்ரீ

    பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலையில் முன்னேற்றம்.. குடும்பத்தார் தகவல்

    • பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • இவரின் உடல்நிலை குறித்து குடும்பத்தார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

    புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர். தமிழில் இவர் பாடிய 'வசீகரா', 'ஒன்றா ரெண்டா ஆசைகள்', 'யாரோ மனதிலே' உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.


    பாம்பே ஜெயஸ்ரீ லண்டனிற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


    இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதென அவரது குடும்பத்தார் சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர். அதில், "பாம்பே ஜெயஸ்ரீக்கு லண்டனில் உடல்நிலை சரியில்லாமல் போனபோது உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


    Next Story
    ×