search icon
என் மலர்tooltip icon

    செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி... ... லைவ் அப்டேட்ஸ்: செஸ் ஒலிம்பியாட்... நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்ட தொடக்க விழா

    செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி 'விருந்தோம்பல்' குறித்த சிறப்பினை திருக்குறள் மூலம் எடுத்துக் கூறினார்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் விருந்தோம்பலின் சிறப்பு குறித்து பேசியிருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்த விழாவில் அவர் கூறிய திருக்குறள்;

    "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு" மேற்கண்ட திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, அதன் விளக்கத்தையும் கூறினார். அதாவது, 'ஒருவர் தனது வாழ்வில் பொருட்களை சேர்த்து, இல்வாழ்வை மேற்கொள்வது எல்லாம் விருந்தினரைப் போற்றி அவர்களுக்கான உதவிகளை செய்வதற்காகவே' என்ற விளக்கத்தையும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

    Next Story
    ×