search icon
என் மலர்tooltip icon

    இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்: தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
    X

    இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்: தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

    இமாச்சல பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 25 தொகுதிகளையே கைப்பற்றி உள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். இதன்மூலம் இமாசல பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனை தொடர்ந்து, காங்கிரசார் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்து வருகின்றனர். 

    Next Story
    ×