என் மலர்tooltip icon

    விருச்சகம்

    2025 மார்கழி மாத ராசிபலன்

    விருச்சிக ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்த பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியன் இணைந்திருப்பதால் தொழில் முன்னேற்றம், வருமான உயர்வு வந்துசேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக்கொடுப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும். மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. சுபக் கிரகத்தின் பார்வை பதிவதால் சுபச் செய்திகள் வந்து சேரும்.

    மிதுன - குரு

    மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன- பஞ்சமாதிபதியானவர் குரு. அவர் அஷ்டமத்தில் சஞ்சரித்தாலும், அவரது பார்வை தன ஸ்தானம் எனப்படும் 2-ம் இடத்தில் பதிகிறது. தன் வீட்டை, தானே பார்க்கும் குருவால் எண்ணற்ற நற்பலன்கள் இல்லம் தேடி வரப்போகிறது. வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு கைகூடும். உறவினர் பகை அகலும். கொடுக்கல் - வாங்கல்களில் லாபம் உண்டு. குரு பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் என்பதால் 'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். அந்த அடிப்படையில் குருவின் பரிபூரண பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் உடல்நலம் சீராகும். உயர்ந்த மனிதர்களின் பழக்கத்தால் பல நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு, அதிகார அந்தஸ்தைப் பெறும் யோகம் கிடைக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குறிப்பாக புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும்.

    தனுசு - சுக்ரன்

    மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். சப்தம - விரயாதிபதி சுக்ரன் தன ஸ்தானத்திற்கு வரும்போது குடும்ப அமைதி கூடும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்க செலவிடுவீர்கள். மேலும் திருமண வயதடைந்த பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வாங்கும் முயற்சி கைகூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். வாங்கிய இடத்தை விற்பனை செய்வதன் மூலம் வரும் தொகையைக் கொண்டு, நடக்கும் தொழிலை விரிவு செய்வீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வரும் வாய்ப்பு உண்டு.

    மகர - செவ்வாய்

    மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாகும். எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். ராசிநாதன் செவ்வாய் வலிமை அடைவதால் யோசிக்காது செய்த காரியங்களிலும் வெற்றி உண்டு. பூமி யோகமும், பிள்ளைகளின் வழியில் நல்ல காரியமும் நடைபெறும் சூழ்நிலையும் உருவாகும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைத்து மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புகழும், புதிய ஒப்பந்தங்களும் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பப் பொறுப்பு கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஆதாயம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 20, 21, 26, 27, ஜனவரி: 5, 6, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    ×