என் மலர்
துலாம்
2025 ஐப்பசி மாத ராசிபலன்
துலாம் ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதிக விரயம் ஏற்படும். லாபாதிபதி சூரியனும் நீச்சம் பெற்றிருக்கிறார். 10-ல் உள்ள குருவால் பதவி மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும் சூழல் உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் சுக்ரன் பெயர்ச்சிக்குப் பிறகு, மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். எதையும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்பட வேண்டிய மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். என்றாலும் 10-ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். அண்ணன், தம்பிகளுக்குள் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் முடிவிற்கு வருவதில் தாமதம் ஏற்படும். திருமணத்தடை உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் பண நெருக்கடியின் காரணமாக ஒரு சிலர் சொத்துக்களை விற்க நேரிடும். பாகப் பிரிவினை திருப்தி தராமல் போகலாம். பிள்ளைகளால் மீண்டும் பிரச்சனை தலைதூக்கும். பெற்றோரின் அனுசரிப்பு கொஞ்சம் குறையும். 'நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். பரம்பரை நோயின் தாக்கத்தால் பதற்றம் ஏற்படும். முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
விருச்சிக - செவ்வாய்
இக்காலம் ஒரு இனிய காலமாகும். ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு தனாதிபதியான செவ்வாய், தன ஸ்தானத்திற்கு வரும்போது, அனைத்து துறையிலும் வெற்றி கிடைக்கும். எதிர் கருத்து உள்ளவர்கள் கூட இணக்கமாக நடந்துகொள்வர். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த மந்தநிலை மாறும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. வீண் வாக்குவாதங்களால் வந்த பிரச்சனை அகலும். வருமானம் உயரும். பிள்ளை களின் வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி பலன்தரும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உங்கள் ராசிநாதன் உங்கள் ராசிக்கே வருவது யோகம்தான். உடல்நலன் சீராகும். செல்வநிலை உயரும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த இலக்கை அடைய இயலும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை குறையும். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 23, 24, 30, 31, நவம்பர்: 9, 10, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.






