என் மலர்tooltip icon

    மிதுனம்

    வார ராசிபலன் 28.9.2025 முதல் 4.10.2025 வரை

    28.9.2025 முதல் 4.10.2025 வரை

    பண வரவுகள் சிறப்பாக இருக்கும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்கிறார். இது அதிர்ஷ்டம் அரவணைக்கும் காலமாகும். லட்சியங்களையும் இலக்குகளையும் அடைவதற்கு சாதகமான நேரம். குடும்பத்தில் அன்பு கூடும். அமைதி நிலவும். பண வரவு அமோகமாக இருக்கும்.

    பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத் தரும், பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்யலாம். முக்கியமான பணிகளை தெளிவாக செய்வதன் மூலம் மதிப்பு கூடும். சில தம்பதிகள் இணைந்து கூட்டுத் தொழிலில் ஈடுபடலாம். அதற்கு தேவையான நிதியும், சந்தர்ப்பமும் தானாக உருவாகும்.

    மறு திருமண முயற்சி பலிதமாகும். திருமணத்திற்கு அதிக வசதியுள்ள வரன் அமையும்.1.10.2025 அன்று மதியம் 2.27 முதல் 3.10.2025 இரவு 9.27 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லவும். புரட்டாசி சனிக்கிழமை மகாவிஷ்ணுவை வழிபடுவதால் பணப்புழக்கம் அதிகமாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×