என் மலர்tooltip icon

    மகரம்

    வார ராசிபலன் 12.10.2025 முதல் 18.10.2025 வரை

    முயற்சிகள் வெற்றி தரும் வாரம். அதிசார குருவால் ராசிக்கு குருப் பார்வை கிடைக்கப்போகிறது. மகர ராசிக்கு மிக அற்புதமான நல்ல மாற்றங்கள் தெரியும். எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். புதிய முயற்சிகான பலன்கள் உடனே தெரியும். முன்னேற்றப் பாதையில் நிலவிய தடைகள் விலகும். இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யும் படியாக வருமானம் கூடும். குடும்ப பிரச்சனைகள் விலகி நிம்மதி கூடும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ்வீர்கள்.

    கை நழுவிச் சென்ற வாய்ப்புகள் இப்பொழுது வந்து சேரும். பதவி உயர்வு, உத்தியோக உயர்வு தானாக கிட்டும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு உபரி லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு பாராட்டும் புகழும் கிடைக்கும். பொன், பொருள் சேரும். வாழ்க்கை துணையின் ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் சீராகும். இடம், பூமி, வாங்கும் முயற்சிகள் கைகூடும். 16.10.2025 பகல் 12.42 மணி முதல் 18.10.2025 இரவு 10.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீண் செலவால் மனச் சஞ்சலம் மனக்குழப்பம் உருவாகும். மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×