என் மலர்
மகரம்
வார ராசிபலன் 24.8.2025 முதல் 30.8.2025 வரை
தடைகள் தகர்த்து வெற்றி நடைபோடும் வாரம்.ராசிக்கு புதன் சுக்கிரன் பார்வை உள்ளது. புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனதில் புதிய தெம்பு, தைரியம் குடிபுகும். விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.உங்களை அலங்கரித்துக் கொள்வதி லும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கு வதிலும் விருப்பம் கூடும். குடும்ப உறவுகளின் செயல்களில் நன்மை இருக்கும். கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.
இதுவரை சந்தித்த பிரச்சினைகள் பனிபோல் விலகும்.துக்கத்தால் தூக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி படிப்பில் ஆர்வம் உண்டாகும். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும்.பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு கூடும் 25.8.2025 அன்று காலை 8.29 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணிச் சுமை அதிகரிக்கும். உத்தி யோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னே ற்றத்துக்கு உதவும் விநாயகர் சதுர்த்தி அன்று பால் கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபடவும்.






