என் மலர்
மகரம்
2025 மார்கழி மாத ராசிபலன்
மகர ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். தொழில் வெற்றி நடைபோடும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உச்சம் பெற்ற குருவின் பார்வை மாதத் தொடக்கத்தில் அமைவதால் கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றியும், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் கிடைக்கலாம். குரு பகவான், மிதுன ராசிக்கு சென்ற பிறகு கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு வரும் குருவால் சில நல்ல மாற்றங்களும் வந்து சேரும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கணிசமான தொகை கைகளில் புரளும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு மட்டுமல்லாமல் பதவி உயர்வும் கூட ஒருசிலருக்கு வரலாம். கடன் சுமை படிப்படியாக குறையும்.
குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். பணப்பற்றாக்குறை அகலும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் பூர்த்தியாகும். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்க எடுத்த முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதன் விளைவாக புதிய பொறுப்புகள் வந்துசேரும்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் பொழுது விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டாளிகள் ஒரு சிலர் விலகினாலும், புதியவர்கள் வந்திணைவர். நீண்டதூரப் பயணங்கள் பலன்தருவதாக அமையும். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பாராத விதத்தில் வரலாம். வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரும் நேரம் இது.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். லாபாதிபதியான அவர் உச்சம் பெறும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பும் ஒருசிலருக்கு உண்டு. வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் வரலாம். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்களுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். சுபச்செய்திகள் வந்துசேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 18, 19, 26, 27, 29, 30, ஜனவரி: 9, 10, 11, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.






