என் மலர்
கடகம்
2025 புரட்டாசி மாத ராசிபலன்
கடக ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வது கடினம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. நண்பர்கள் பகைவர் களாக மாறலாம். நல்ல சந்தர்ப்பங்கள் கைநழுவிச் செல்லலாம். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளும் எதிர்வரும் இடர் பாடுகளை அகற்றும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஆரோக்கியத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும் செலவழிக்கும் சூழல் ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். இதுவரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள், இப்பொழுது சொந்த வீட்டிற்கு குடியேறும் யோகம் வாய்க்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினை தீரும். வருமானம் திருப்தி தரும். 'வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள்.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசியிலேயே குரு உச்சம் பெறுவது யோகம்தான். 'குரு பார்த்தாலும், சேர்ந்தாலும், இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும்' என்பர். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, பலம்பெற்ற குரு உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம், எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்தபடியே வருமானம் உயரும். இல்லத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் யோகம் உண்டு. இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். 'தொழில் தொடங்க முடியவில்லையே' என்ற கவலை இப்போது மாறும். உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் ஒரு சில நல்ல காரியங்கள் நடந்தேறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும். மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் மேலோங்கும். இக் காலத்தில் முறையாக வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குரு கவசம் பாடி குரு பகவானை வழிபடுவது நல்லது.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழு வதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமத்துச் சனி வக்ரம் பெறுவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள். எதிர்கால நலன்கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைக்கும்.
பொதுவாழ்வில் புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகள் பலரும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவர். பெண் களுக்கு இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 20, 21, 24, 25, அக்டோபர்: 6, 7, 11, 12, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.






