என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023
தாய்மை பண்பு நிறைந்த கடக ராசியினரே ராசிக்கு 9ல் குருவும், சனி 7,8ம் இடத்திலும், ராகு/கேதுக்கள் 10/4ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
ஒன்பதாமிட குருவின் பொது பலன்கள்: ஒன்பதாமிடம் என்பது பாக்கிய ஸ்தானம். 6,9ம் அதிபதி குரு 9ல் ஆட்சிபலம் பெறுகிறார்.9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு 7, 8ம் அதிபதி சனியின் பார்வை 17.1.2023 வரை உள்ளது. 9ம் இடத்திற்கு சனி, குரு சம்பந்தம் இருப்பதால் பலர் ஜீவனத்திற்காக இடம் பெயரலாம். 6ம் அதிபதி 9ல் ஆட்சி பலம் பெறுவதுடன் சனிப் பார்வை இருப்பதால் சுபமும் அசுபமும் சேர்ந்த பலனே நடக்கும்.
குருவின் 9ம் பார்வை 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு உள்ளது. பலர் 6ம்மிடம் என்றால் பொருள் கடன் என்று நினை க்கிறார்கள். பிறவிக்கடன், பொருள் கடன் சேர்ந்தது தான் 6ம் பாவகம். குருவின் 9ம் பார்வைக்கு பாக்கிய பலன்களை அதிகரிக்கும்சக்தி உள்ளது. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் கர்மாவோடு தொடர்புடையது.
பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்கள், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவுகளிடம் ஒன்றை நாம்பெற்றுக் கொள்கிறோம்,அல்லது இழக்கிறோம். இந்த கர்மாவின் தொடர்ச்சியில் சில உறவுகள் கர்ம பந்தமாகிறது. பல உறவுகள் கர்ம வினையாகிறது. அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.சில சமயங்களில் ஏமாற்ற ப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.சிலருக்கு நல்லது செய்கிறோம்.பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம்.
இந்த கொடுக்கல் வாங்கலே ருண பந்தம் எனப்படுகிறது. ருணம் என்றால் கடன். பொருள் கடன் மட்டுமல்ல. ஒருவரிடம் இருந்து பெற்ற அன்பும் உதவியும் கூட கடன் தான். ஒருவரிடம் பெற்ற உதவி மற்றும் அன்பிற்கு பிரதி உபகாரம் செய்யாமல் இருந்தால் ருண பந்தம் கர்ம வினையாக மாறி ஜனன கால ஜாதகத்தில் பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாமிடம் பலம் இழக்கும்.
குருவின் 9ம் பார்வை 6ம் இடத்திற்கு கிடைக்கும் இந்த காலத்திற்கு பெற்றோர்கள், தாத்தா, பாட்டி வாழ்ந்து கொண்டுஇருந்தால் அவர்களுக்கு தேவையான உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து உங்களது உணர்வுகளை சாந்தமாக வெளிப்படுத்துங்கள், அவர்களின் நல்லாசிகளைப் பெறுங்கள். பெற்றோர்கள் மறித்த பிறகு எவ்வளவு பித்ருக்கள் பூஜை செய்தாலும் கிடைக்காத பாக்கிய பலன் ஒரு நொடியில் கிடைத்துவிடும்.
பெற்றோர்கள் வாழ்ந்து மறைந்திருந்தால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது குறிப்பாக விடியற்காலை 5 - 6க்குள் மானசீகமாக பேசுங்கள். நல்லாசிக்காக ஆத்மார்த்தமாக வழிபடுங்கள். அடுத்த நொடியில் உங்கள் குறைகள் பரிசீலிக்கப்படும். உங்களுக்கு பிறவி கொடுத்தவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய பிரதி உபகாரம் தீரும்.
குருவின் 9ம் பார்வை 6ம் இடத்திற்கு இந்த கால கட்டத்தில் முன்னோர்களுக்கு முறையான பித்ருக்கள் பூஜை செய்து வழிபட பிறவிக்கடன் மற்றும் பொருள் கடன் தீரும். கடன் பெற்றவர் திருப்பிச் செலுத்த இயலாத சூழ்நிலையில் இருந்தால் கால அவகாசம் கொடுங்கள். மிரட்டி தற்கொலைக்கு அல்லது தலைமறைவாக காரணமாக இருக்காதீர்கள். உண்மையில் கொடுக்க கூடிய சந்தர்ப்பம் இருந்தும் ஏமாற்றுபவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.
5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை ராசிக்கு இருப்பதால்இயற்கையிலேயே அழகான நீங்கள் மேலும் அழகு பெறுவீர்கள். உங்களுக்கு என்று தனி கொள்கை வைத்து அதன் அடிப்படையில் செயல் படுவீர்கள். சட்ட திட்டத்திற்கு இணங்கி நடப்பீர்கள். தங்களின் தோற்றம், செயல்பாடுஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் ஏற்படும். மிடுக்கான தோற்றம் ஏற்படும். தடை பட்டசெயல்கள் வெகு விரைவில்செயலாக்கம் பெறும். உங்களின் செயல்பாடுகள் வியக்க தக்க வகையில் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பல்வேறுஅனுகூலமானபலன்கள் நடைபெறும்.உங்களுடைய தகுதி, திறமைஉயரும். சமூதாய அங்கீகாரம்ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மாற்றங்களும் ஏற்றங்களும் வீடு தேடி வரும்.
7ம் பார்வை பலன்கள்: குருவின்7ம் பார்வை 3ம் இடமான சகாய ஸ்தானத்தில் பதிகிறது.அனைத்து விதமான தடைகளும் தகர்ந்து முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். உங்களின் முயற்சிகள் தக்க சமயத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். உங்கள் முயற்சிகளையும், உழைக்கும் ஆற்றலையும் பல மடங்கு உயர்த்திக் கொண்டு முறையாக பயன்படுத்த ஏற்ற காலம். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளிடம் இருந்தகருத்து வேறுபாடு மறையும். உடன் பிறந்தவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடன் நன்றாக இருப்பார்கள். சகோதரர் தொழில் அல்லது உத்தியோகத்திற்கு பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம்.வேலையில் தொழிலில் இடமாற்றம் உண்டாகும். சிலர் வீடு மாற்றம் செய்யலாம். சிலர் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீடு கட்டி குடியேறலாம்.
9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம்பார்வை 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிகிறது. குருவின் பார்வை படும் இடம் பூரிப்பாகும். உங்களைப் பிரிந்த பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு மீண்டும் இல்லம் திரும்புவார்கள். அரசு உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகாதவர்களுக்கு பணி நிரந்தரமாகும். கவுரவப் பதவிகள், விருதுகள் கிடைக்கும். ஆன்மீகத் தொண்டில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீக குருமார்களின் நல்லாசி கிடைக்கும். ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும்.
வேலை நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசித்த கணவன், மனைவி இப்பொழுது தம்பதியராக ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தும் நேரம் வந்துவிட்டது.அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும். புதியஅணிகலன்கள், அழகு ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவனுக்கோ, மனைவிக்கோதிடீர் அதிர்ஷ்டம், பெரும் பணம்போன்றவைலாட்டரி, பங்குச் சந்தை, உயில் மூலம் ஆதாயம் கிடைக்கும்.சகோதர, சகோதரிகள் அல்லது பிள்ளைகளின் திருமணத்தை முன் நின்று விமரிசையாக நடத்துவீர்கள். பாகப் பிரிவினைகள் சுமுகமாகும். எதிர்பாலின நட்பு கிடைக்கும். மகப்பேறு கிடைக்காதவர்களுக்கு குல தெய்வ அருளால் ஆண் குழந்தை பிறக்கும். வீடு, வாகன யோகம் கிட்டும். அவரவர் வயதிற்கும், தசா புக்திக்கும் ஏற்ற அனைத்து சுப நிகழ்வுகளும் நடக்கும்.
குருவின் வக்ர பலன்:29.7.2022 முதல் 23.11.2022 வரை
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமடையும் காலத்தில் உங்கள் ஆற்றலையும் திறமையையும் பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். மனதை ஆட்டிப்படைத்த இனம் புரியாத வேதனைகள் மறையும்.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிறருக்கு பொறுப்பு கையெழுத்திட்ட ஜாமீன் தொகை வந்து சேரும். புதிய திருப்பங்கள் ஏற்படும். தாய், தந்தை உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் நிலவிய இன்னல்கள் அகலும் ராசிக்கு சனி பார்வையும் இருப்பதால் ஒரு சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதி வந்து மன சஞ்சலத்தை அதிகரிக்க செய்யும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
திருமணம்:குருப் பார்வை ராசிக்கு இருப்பதால் பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த கடக ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும். 2023ல் அஷ்டமச் சனி ஆரம்பமாகப் போவதால் 2022க்குள் திருமணத்தை நடத்தி முடிப்பது நல்லது.
பெண்கள்:குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிலவிய பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். உங்களை புரிந்து கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் உங்கள் நல்ல குணம் அறிந்து சரணடைவார்கள்.
பரிகாரம்: பொதுவாக கர்ம காரகன் சனி கடக ராசிக்கு அஷ்டமாதிபதி என்பதால் இயல்பிலேயே பித்ரு தோஷ தாக்கம் மிகுதியாக இருக்கும். கோட்சார குரு 9ல் ஆட்சி பலம் பெற்று இருக்கும் இந்த கால கட்டத்தில் முறையான முன்னோர் வழிபாடு செய்து வர 2023 ஜனவரியில் ஏற்படப் போகும் அஷ்டமச் சனியால் பெரிய பாதிப்பு இருக்காது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
சுபகிருது வருட பலன் - 2023
கற்பனையுணர்வு மிகுந்தகடக ராசியினருக்கு தமிழ் புத்தாண்டு நிறைந்த பொருளாதாரத்தை வழங்க நல் வாழ்த்துக்கள்.
இந்த புத்தாண்டில் ராகு பகவான்10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். கேது பகவான் 4ம் இடமான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 7, 8ம் இடங்களில் சஞ்சரிக்கிறார். இந்த சுப கிருது ஆண்டு முழுவதும் பாக்கியாதிபதி குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் ஒளிமயமான எதிர்காலம் அமையப்போகிறது. கண்டகச் சனியின் பாதிப்புகள் குறையும்.
கடந்த 5 மாதங்களாக அஷ்டம குருவால் ஏற்பட்ட இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும். பத்தில் சஞ்சரிக்கும் ராகு நிலையான தொழிலால் உங்களைவளம் செய்யப் போகிறார். குருபகவான் ராசியை பார்ப்பதால் தடை பட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும். மனக் குழப்பம் நீங்கி தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள் மொத்தத்தில் ஆரவாரம் நிறைந்த புத்தாண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
குடும்பம்: ராசி, 5 மற்றும் 9ம்மிடம் குருவின் பார்வையால் புனிதமடைவதால் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உண்மையான உறவுகளின் அன்பில் ஆனந்தம் அடைவீர்கள். பிரிந்த குடும்ப உறவுகளின் வருகை ஆறுதலையும் நிம்மதியையும் தரும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும். ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். சிலருக்கு மருமகன், மருமகள் வருவார்கள்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.விவகாரத்து வழக்கு சாதகமாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
ஆரோக்கியம்: 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் கேது நிற்பதால்சிலருக்கு யூரினரி இன்பெக்சன், கல்லடைப்பு போன்ற கணையம், சிறுநீரகம் சம்பந்தமான உடல் உபாதைகள் தோன்றும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும். தொழில் அலைச்சலால் நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாது.ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் உடல் உபாதைகள் எளிதில் கட்டுப்படும்.
திருமணம்:பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த கடக ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும்.சிலருக்கு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்காத காதல் கலப்பு திருமணமாகவே இருக்கும். 2023ல் அஷ்டமச் சனி ஆரம்பமாகப் போவதால் 2022க்குள் திருமணத்தை நடத்தி முடிப்பது நல்லது.
பெண்கள்:இந்த ராகு கேது பெயர்ச்சி மகிழ்ச்சியை மிகைப்படுத்தி தரும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். உற்றார் உறவினர்களுடன் நிலவிய மன பேதங்கள் மறையும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். தாய் வழிச் சொத்து கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். வீட்டுக் கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். இந்த ஆண்டு அனைத்து வகையிலும் திருப்புமுனையாக அமையும்.
மாணவர்கள்:மாணவ - மாணவிகளின் கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.கல்வியில் சாதனை படைக்கக்கூடிய நல்ல காலம். உயர் கல்விக்கான வாய்ப்பு மிகச் சுலபமாக கிடைக்கும். வெளியூரில் அல்லது வெளிநாட்டில் விடுதியில் சென்று தங்கி படிக்கும் வாய்ப்பு உருவாகும்.4ல் கேது இருப்பதால் பரிட்சைக்கு செல்லும் முன்பு விநாயகரை வழிபடவும்.
உத்தியோகஸ்தர்கள்:உத்தி யோகத்தில் இருப் பவர்களுக்கு பொறு ப்புகள் அதிகமாக வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும்.வருமானம் அதிகரிக்கும். உங்களது கடமைக்களை சிறப்பாக நிறைவேற்றி புகழ் அடைவீர்கள். சக ஊழியர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும்.
முதலீட்டாளர்கள்:சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அபாரமான வளர்ச்சி இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். 10ல் ராகு இருப்பதால் நியாயம், தர்மத்திற்கு கட்டுப்பட்டு தொழில் நடத்தியவர்கள் கூட அதை காற்றில் பறக்க விட்டு குறுக்கு வழியில் தொழிலை வளர்க்க விரும்புவார்கள்.சுய தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு மிகச் சிறப்பான நல்ல நேரம். உற்பத்தி, கொள்முதல் அதிகரித்துக் கொண்டே இருக்கும் தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும். 17.1.2023ல் அஷ்டமச் சனி ஆரம்பமாகுவதால் தொழில் தொடர்பான அனைத்து விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
அரசியல்வாதிகள்:சனியின் சஞ்சாரம் சற்று சுமாராக இருப்பதால் அரசியல் வாதிகளுக்கு பொது மக்களுக்கும் இடைய கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வாக்குறுதி கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அநாவசியமான விமர்சனங்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
கலைஞர்கள்:கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான தொழில் வளர்ச்சி ஏற்படும். உங்களது திறமையை வெளி உலகத்திற்கு காட்ட புதிய, புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். படப்பிடிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்காக கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டும்.இசைக் கலைஞர்கள், சினிமா பத்ரிக்கையாளர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள் வசனகர்த்தாக்கள் ஆகியோர்க்ளுக்கு விருது கிடைக்கும்.
விவசாயிகள்:செவ்வாயின் வீட்டில் சஞ்சரிக்கும் ராகு அபரிமிதமான நற்பலன்களை வழங்குவார். எதையும் தைரியமாக எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். விவசாயிகளுக்குஅதிக விளைச்சல் மற்றும் கால்நடைகள் வளர்ப்பில் வருமானம் அதிகரிக்கும். விளை நிலங்கள் தொடர்பான பங்காளி சண்டை பேச்சுவார்த்தை மூலமாக சரியாகும்.
ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 10ல் நிற்கும் ராகுவாலும் 4ல் நிற்கும் கேதுவாலும் சில சங்கடங்கள் உருவாகலாம். ஜாதகரின் பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்கு ராகு உறுதுணையாக இருந்தால் கூடதொழில் மூலம் பெயருக்கு ஒரு கலங்கமும் ஏற்படலாம்.
உங்கள் அறியாமை மற்றும் அவசர புத்தியால் சட்டச் சிக்கல் மற்றும் வாஸ்து குற்றம் நிறைந்த வீடு, மனைகளை வாங்க நேரலாம்.குறைந்த மதிப்புள்ள சொத்தை அதிக விலை கொடுத்து வாங்கலாம். அதிக மதிப்பு உள்ள சொத்தை குறைந்த விலைக்கு விற்கலாம்.சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகலாம். மின்சாதனங்கள், வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும்.
குரு: 29.7.2022 முதல் 23.11.2022 வரை ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் கணவன், மனைவி உறவில் விரிசல் ஏற்படலாம். அல்லது தொழில் உத்தியோகம் தொடர்பாக தம்பதிகள் பிரிந்து வாழலாம். சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிடிப்பு குறையும்.நம்பியவர்களே துரோகம் செய்யலாம். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். எந்த ஒரு நிலையிலும் அவசரம் வேண்டாம்.
பரிகாரம்:வியாழக்கிழமை காலை 11--12சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்க நன்மை உண்டாகும்.
கடன் சுமை தீரும்
5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கடன் பிரச்சனையிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய சிக்கல்கள் தீரும். பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும். பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். எதிர் பாராத தனவரவினால் பொருளாதார மாற்றமும் ஏற்றமும் மன மகிழ்வை தரும். வங்கியில் உபரித் தொகை சேமிப்புத் தொகை உயரும். கரைந்த சேமிப்புகள் வளரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
இன்றைய ராசிப்பலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். தொழில் சம்பந்தமாக தொலை தூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். பொதுநல ஈடுபாட்டால் புகழ் கூடும்.






