என் மலர்tooltip icon

    மேஷம்

    வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை

    31.8.2025 முதல் 6.9.2025 வரை

    நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசிக்கு 5-ல் சூரியன், புதன், கேது சேர்க்கை உள்ளது. இதனால் சுக சவுகரியங்கள் அதிகரிக்கும். வாழ்நாள் எண்ணங்கள், லட்சியங்கள், கனவுகள் நிறைவேறும். எந்தச் செயலையும் திறம்படச் செய்யும் செயல்திறன் கூடும். உயர் பதவி கிடைக்கும். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களை நோக்கி பயணிப்பீர்கள்.

    விதவிதமான பொன், பொருள், ஆபரணங்கள் கிடைக்கும். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். புகழ், அந்தஸ்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் தேடி வரும். சிலருக்குப் புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் உண்டாகும்.

    கண் அறுவை சிகிச்சை வெற்றியாகும். கணவன்- மனைவி நெருக்கம் அதிகரிக்கும். 1.9.2025 அன்று இரவு 7.55 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் தொலை தூரப் பயணங்களை தவிர்க்கவும். குடும்ப பிரச்சினையை வெளி நபர்களுடன் பகிரக் கூடாது. பிரதோஷ காலங்களில் நந்தி பகவானுக்கு பச்சரிசி மாவினால் அர்ச்சனை செய்ய கடன் தொல்லைகள் குறையத்து வங்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×