search icon
என் மலர்tooltip icon

    மேஷம்

    ஆங்கில ஆண்டு பலன் - 2023

    தைரியம் நிறைந்த மேஷ ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் குரு மற்றும் சனியின் சஞ்சாரம் உங்களுக்குச் சாதகமாக உள்ளது. ராகு கேதுவின் சஞ்சாரம் சாதகமற்று இருப்பதால் உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும்.

    உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுத்தால் வருடத்தின் எல்லா நாட்களும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகவே இருக்கும். இந்த ஆண்டிற்கான விரிவான பலன்களை பார்க்கலாம்.

    குருவின் சஞ்சார பலன்:- ஏப்ரல் 13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் மிக யோகமான காலம். உங்களின் எண்ணங்கள் , திட்டங்கள் நிறைவேறும்.பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த /எதிர்பாராத பெரும் தொகை கிடைக்கும். தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வீட்டில் சேரும்.

    வீட்டிற்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன வரவு மிகுதியால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள்.துன்பம் என்றால் என்னவென்றே தெரியாது. பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். வீட்டில் சுப நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். துணிச்சல் அதிகரிக்கும். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடை போடுவீர்கள்.

    ஏப்ரல் 13-ல் குரு விரய ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பித்துச் சொல்லும் பலன் அல்ல. 12 -ம் இடம் விரய ஸ்தானம் என்பதால் செலவுகளும் கட்டுக்கு அடங்காமல் இருக்கும். வரவிற்கு மீறிய செலவு உண்டாகும். சொத்துக்கள் கை நழுவிப் போகலாம். பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நடக்கலாம். வயதானவர்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் சென்று செட்டிலாகலாம் அல்லது முதியோர் இல்லம் செல்லலாம். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். புதிய கடன் பெற்று பழைய கடனை அடைப்பீர்கள்.

    சனியின் சஞ்சார பலன்:- தொழில் ஸ்தான அதிபதி சனி 10-ல் ஆட்சிபலம் பெற்று இருக்கிறார்.தொழிலில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலில் சாதனை செய்யக் கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். வருமான வரி கட்டக் கூடிய அளவிற்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும். தன வரவு சிறக்கும்.

    பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். குடும்பம் மகிழ்சியாக இருக்கும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித் தரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள். போட்டி பொறாமைகள் இருந்தாலும் சமாளித்து வெற்றி போடுவீர்கள்.

    26-2-2022 முதல் 6-4-2022 வரை இந்த காலகட்டத்தில் செவ்வாய் சனியுடன் இணைகிறார். ஏற்றுமதி, இறக்குமதி தொடர் பான தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் அதி கரிக்கும். உங்களின் ராசி அதிபதி செவ்வாயும் சனியும் பகை கிரகங்கள் என்பதால் சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வும் நேரும். உடலில் இடது கண், பாதங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் வேண்டும். பயணங்கள் அதிகரிக்கும். வம்பு, வழக்கு அவமானங்கள், ஆரோக்கிய குறைபாடு, எதிர்மறை சிந்தனை கள், எல்லாவற்றிலும் சாதகமற்ற சூழ்நிலை, விபத்துகள் என மன உளைச்சலே மிஞ்சும்.

    சிலருக்கு உடல் நலம் பாதிப்பால் மருத்துவமனைக்கு சென்று சில நாட்கள் தங்கி சிகிச்சை செய்ய நேரலாம். குடும்பத்தில் நிம்மதி குறையும். முறையான திட்டமின்மையால் உங்களின் செயல்பாடுகள் உங்களை பதம் பார்க்கும். வெகு நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் உங்களுக்கு மன உளைச்சல் தரும். ஒரு சிலருக்கு இன்சூரன்ஸ், பாலிசி முதிர்வு தொகை, உயில் சொத்து கிடைக்கும்.தந்தையின் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    ராகு/கேது சஞ்சார பலன்:- ஏப்ரல் 12 வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். இக்கால கட்டத்தில் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும். மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் மாற்றிப் பேசி மன குழப்பத்துடன் வாழ்வார்கள். பணத்தாசை அதிகரிக்கும். வேற்று மொழி பேசுபவரால் குடும்பத்தில் நிம்மதி போகும். நேர்வழி, குறுக்குவழி என பல வழிகளில் பணம் பையை நிரப்பும். சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்தில் காலதாமதம் ஏற்படும்.

    நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனக்குறைவால் பிரச்சனைகளை தானே தேடிக் கொள்வார்கள். சிலரின் வாரிசுகள் குடும்பத்தை விட்டு பிரிவார்கள். திருமண வாழ்க்கையில் நெருடல், மன வேதனை, களத்திரத்துடன் பிரச்சனை இருக்கும். தவறான வாழ்க்கை துணையை தேர்ந்து எடுப்பது அல்லது வாழ்நாள் முழுவதும் மன வேதனை தரும் மறு விவாகம் ஏற்படும். எனவே மேஷ ராசியினர் பேச்சில் சிந்தனையில் கவனத்துடன் இருக்க வேண்டும். 8-ல் உள்ள கேதுவால் தனியாக அமைதியாக இருப்பதை மனம் விரும்பும். பொய்யான வதந்திகளால் பெயர் கெடும். அடிவயிறு தொடர்பான உடல் உபாதைகள் தோன்றலாம்.

    12-4-2022-ல் ராகு ராசிக்கும் கேது 7-ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் உருவாகும். 7-ம் இடத்திற்கு சனி பார்வையும் இருப்பதால் திருமண வாய்ப்புகள் தள்ளிப்போகும். கணவன், மனைவிக்கு சிறு கருத்து வேறுபாடு வந்து மறையும். பல நேரங்களில் சம்பந்திகள் சண்டையாகவும் மாற வாய்ப்பு உள்ளது.

    ஜனன ஜாதகரீதியான தசாபுத்தி சாதகமற்றவர்களுக்கு விவாகரத்து வரை செல்லும். பல கூட்டுக் குடும்பம் பிரியும். சில பிள்ளைகள் தவறான திருமணத்தால் குடும்பத்தை விட்டு பிரிவார்கள் . உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. அதுவே கணவன் மனைவி கருத்து வேறுபாடுக்கு காரணமாக அமையும். தொழில் கூட்டாளிகள் இடையே முறையான ஒப்பந்தம் போட்டு தொழில் நடத்த வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும்.

    திருமணம்:- சூரிய, சந்திர, செவ்வாய் தசை நடப்பவர்களைத் தவிர பிறருக்கு கோட்சார ராகு /கேதுவால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. கோட்சார குருவின் 9ம் பார்வை ராசிக்கு ஏழாம் இடமான துலாத்திற்குப் கிடைப்பதால் தோஷ நிவர்த்தி பெற்று ஏப்ரல் 2022-க்குள் திருமணம் முடியும்.

    பெண்கள்:பிறந்த வீட்டில் இருந்து வர வேண்டிய சீதனங்கள் கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். பணிபுரியும் இடத்தில் பெண்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.மன சஞ்சலத்தால் வீட்டு விஷயத்தை பிற ஆண்களிடம் பேசி வம்பை விலை கொடுத்து வாங்கக் கூடாது. பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.

    விவசாயிகள்:-ஏப்ரல் 13--க்குப் பிறகு புதிய மாற்றங்கள் உண்டாகும்.விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். உபரியான விளைச்சல் ஏற்படும். விளை பொருட் களுக்கு சந்தையில் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலில் உள்ளவர்கள் ஏற்றம் பெறுவர். வாழ்க்கை தரம் உயரும். விளை நிலம் தொடர்பான வழக்குகள் இருந்தால் தள்ளுபடியாகும்.

    உத்தியோகஸ்தர்கள்:- வேலையின்றி இருந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு சம்பள உயர்வு என்று அனைத்து வித நன்மைகளும் தேடிவரும். அரசு உத்தியோகத்திற்கு முயற்சித்தவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்கும். வேலை பார்த்த இடத்தில் இருந்து வந்த பிணக்குகள் சீராகும். இது வரை நிரந்தர வேலை இல்லாத வர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்பவர்களுக்கு கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும்.

    முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்:- தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். இதுவரையில் யோசிக் காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவீர்கள்.உற்பத்தி தொழிலில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் ஏப்ரலுக்கு மேல் சிலர் குலத் தொழிலில் இருந்து விடுபட்டு வேறு தொழில் செய்ய ஆர்வம் மிகும். கூட்டுத் தொழில் புரிபவர்கள் தொழில் கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய பங்கு தாரர்களைத் தவிர்ப்பது நலம்.

    அரசியல்வாதிகள்:- 7-ம் இடத்திற்கு சனிப் பார்வை இருப்பதால் ஏப்ரல் 2022-க்கு மேல் சிலர் கட்சி மாறலாம். கட்சி கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம். ராகு, கேதுக்களின் நிலைப்பாடு சாதகமற்று இருப்பதால் கூட்டாளிகளால் வீண் பழி அல்லது வம்பு, வழக்கு உருவாகலாம். வாக்கில் நிதானம் தேவை. கட்சிப் பணிக்காக அதிக உழைப்பையும், பொருளையும் விரயம் செய்யும் நேரம். பெயர், புகழை தங்க வைக்க கடுமையாக பாடுபட நேரும். சந்தர்ப்பவாதியாக செயல்படாமல் மக்களுக்காக உழைத்தால் நன்மைகள் மிகும்.

    மாணவர்கள்:- மாணவ மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுடன் ஆசிரியர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். பள்ளி, கல்லூரி கலை நிகழ்சிகளில் கலந்து பரிசுகளும், பதக்கங்களும் பெறுவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதுத்தெம்பையும், புத்துணர்வையும் கொடுக்கும்.

    அஸ்வினி:- வரவுக்கு மேல் செலவு ஏற்பட்டாலும் ஏதேனும் ஒருவகையில் செலவைச் சரி செய்ய தேவையான பணம் வந்து சேரும். கிருஷ்ணரை வழிபட மன நிறைவு ஏற்படும்.

    பரணி:- நண்பர்களால் சில அசவுகரியங்கள் ஏற்பட்டாலும் ஆதாயமும் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெள்ளிக்கிழமை ராகு வேளையில் பைரவரை வழிபட சிறப்பான யோகம் தானாகவே அமையும்.

    கிருத்திகை 1-ம் பாதம்:- நீண்டகாலமாக தொல்லை கொடுத்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வர சிறப்பான யோகங்கள் தானாகவே அமையும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×