ஷாட்ஸ்
புதிய கட்டிடத்தில் துணை ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றினார்: பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நாளை தொடங்குகிறது
பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நாளை பழைய கட்டிடத்தில் தொடங்குகிறது. இதையொட்டி இன்று புதிய பாராளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். கடந்த மே மாதம் 28-ந் தேதி திறக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் தேசிய கொடி ஏற்றப்படவில்லை என்பதால் இன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.