ஷாட்ஸ்
மணிப்பூர் கலவரம்: வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை- அமித் ஷா எச்சரிக்கை
மணிப்பூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போலிச் செய்திகளுக்கு மணிப்பூர் மக்கள் செவி சாய்க்க வேண்டாம். செயல்பாடுகளை நிறுத்துதல் (SoO) ஒப்பந்தத்தின்படி வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆயுதம் ஏந்தியவர்கள் போலீஸ் முன் சரணடைய வேண்டும். இதற்கான நடவடிக்கை நாளையில் இருந்து தொடங்கும். யாரிடமாவது ஆயுதம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.