ஷாட்ஸ்
தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. குவாட்டருக்கு ரூ. 10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ. 320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என டாஸ்மாக் அறிவித்துள்ளது.