ஷாட்ஸ்

தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது: மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல்

Published On 2023-10-09 10:12 IST   |   Update On 2023-10-09 10:12:00 IST

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது. சபை தொடங்கியதும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், கே. பழனியம்மான், வெ.அ. ஆண்டமுத்து மற்றும் பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் அறிவியலாளர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Similar News