ஷாட்ஸ்

விடாது பெய்த மழை - ஓ.பி.எஸ். புரட்சி பயண பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

Published On 2023-09-03 20:46 IST   |   Update On 2023-09-03 20:47:00 IST

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க மாவட்டம்தோறும் சென்று பொதுக்கூட்டம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து. இந்த சந்திப்புக்கு 'புரட்சி பயணம்' என்று பெயரிட்டார். இதன் துவக்கமாக இன்று காஞ்சிபுரம் அருகே கலியனூர் பொதுக்கூட்டத்தில் பேச திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது. இன்றைய பொதுக்கூட்டம் திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், வேறொரு நாளில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஓ.பி.எஸ். அணியில் இடம்பெற்று இருக்கும் பண்ரூட்டி ராமச்சந்திரன் அறிவித்து இருக்கிறார்.

Similar News