ஷாட்ஸ்

சாமானியர் நம்பிக்கையை காப்பாற்றுவதே நல்லாட்சியின் அடையாளம்.. மு.க. ஸ்டாலின்

Published On 2023-10-03 20:38 IST   |   Update On 2023-10-03 20:39:00 IST

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும். இந்த அரசு நலிந்தோர், எளியோர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை நாடக்கூடிய அரசாகும். காவல் நிலையத்தை நாடி வரும் சாமானியர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவது தான் ஒரு நல்ல ஆட்சியின் அடையாளம்," என்று தெரிவித்து உள்ளார். 

Similar News