ஷாட்ஸ்

தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் இரண்டாவது இடம்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Published On 2023-06-26 17:54 IST   |   Update On 2023-06-26 17:55:00 IST

சென்னையில் நடைபெற்ற சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில் மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடத்தை நோக்கி பயணிப்பதாக கூறினார். மேலும், பள்ளி கல்வி துறை ஏராளமான திட்டத்ங்கள செயல்படுத்தி வருவதாகவும், தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கூறினார்.

காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்தியாவை பேணிக் காக்கும் பொறுப்பு மாணவர்களின் கைகளில் உள்ளது என்றும் முதலமைச்சர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News