ஷாட்ஸ்
2024 பாராளுமன்ற தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெறுவோம்.. பிரதமர் மோடி நம்பிக்கை
டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, 2024 பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அனைத்து கட்சிகளும் வளர்ச்சியை எடுத்துச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும். நாம் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்றாவது ஆட்சியில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.