ஷாட்ஸ்

குழந்தை கை இழந்த விவகாரம்: விசாரணை அறிக்கை வெளியீடு

Published On 2023-07-05 12:31 IST   |   Update On 2023-07-05 12:32:00 IST

சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 1½ வயது குழந்தை கை இழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை குழுவின் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், குழந்தைக்கு ரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை. Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றும் முயற்சியில் குழந்தையின் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News