ஷாட்ஸ்

1500-க்கும் அதிகமானோர் சூழ்ந்ததால் கிராமத்தில் இருந்து வெளியேறிய ராணுவம்

Published On 2023-06-25 10:39 IST   |   Update On 2023-06-25 10:40:00 IST

1500-க்கும் அதிகமானோர் சூழ்ந்ததால் கிராமத்தில் இருந்து வெளியேறிய ராணுவம்மணிப்பூர் இம்பாலின் கிழக்குப் பகுதியில் உள்ள இதாம் கிராமத்தில் ஆயுதங்களுடன் கிளர்ச்சியாளர்கள் மறைந்து இருந்தனர். அவர்களை ராணுவம் கைது செய்தது. அந்த நேரத்தில் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக கிராம மக்கள் திரண்டனர். அவர்கள் ராணுவத்தை சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் தலைமையிலான குழுக்களும் ராணுவத்தை எதிர்த்து நின்றன. ராணுவ நடவடிக்கை எடுத்தால் கடும் உயிர்ச்சேதம் நிகழும் என்பதால், கிளர்ச்சியாளர்களை விடுவித்து கைப்பற்றிய ஆயுதங்களுடன் ராணுவம் வெளியேறியது.

Similar News