ஷாட்ஸ்

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கமுடியாது - காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடகா மீண்டும் திட்டவட்டம்

Published On 2023-08-29 16:45 IST   |   Update On 2023-08-29 16:45:00 IST

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் டெல்லியில் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். காவிரியில் இருந்து வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். வழக்கம்போல் இம்முறையும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டது.

Similar News