ஷாட்ஸ்
null

கனமழை எதிரொலி: நீலகிரி 4 தாலுகா, தென்காசி 5 வட்டார பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2023-07-07 08:40 IST   |   Update On 2023-07-07 14:13:00 IST

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். மேலும் தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, கடையம், கீழப்பாவூர், செங்கோட்டை ஆகிய 5 வட்டாரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் துரைரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Similar News