ஷாட்ஸ்

மக்கள் பாக்கெட்டில் இருந்து ரூ. 8.33 லட்சம் கோடி கொள்ளை: காங்கிரஸ் கடும் விமர்சனம்

Published On 2023-08-30 07:31 IST   |   Update On 2023-08-30 07:34:00 IST

சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ள நிலையில், மோடி அரசு கடந்த 9.5 ஆண்டுகளாக 31.37 கோடி மக்களிடம் சிலிண்டர் விலையை உயர்த்தி கொள்ளை அடித்துள்ளது. அதுவும், 8.33 லட்சம் கோடியை மக்கள் பாக்கெட்டில் இருந்து கொள்ளையடித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தில் பயனடையும் பெண்கள் பாக்கெட்டில் இருந்து, 2017-ல் இருந்து 68,702.76 கோடி ரூபாயை வருவாயாக பெற்றுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆறு மாதங்களுக்கு முன் நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கி மோடி அரசு நினைவு கூர்ந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா விமர்சனம் செய்துள்ளார்.

Similar News