ஷாட்ஸ்
ரூ.538 கோடி மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது - அமலாக்கத்துறை அதிரடி
கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று கைது செய்யப்பட்டார். முன்னதாக, அமலாக்கத்துறை இயக்குனரகம் அவரிடம் விசாரணை நடத்தியது. மே 5-ம் தேதி மும்பையில் நரேஷ் கோயல் வீடு, அலுவலகம் உள்பட 7 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. சி.பி.ஐ. பதிவுசெய்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.