ஷாட்ஸ்

ரஷியா மண்ணில் 18 மாதங்களில் மிகப்பெரிய தாக்குதல்: 6 பிராந்தியங்களை குறிவைத்த உக்ரைன் டிரோன்கள்

Published On 2023-08-30 08:40 IST   |   Update On 2023-08-30 08:41:00 IST

ரஷியாவின் ஆறு பிராந்தியங்களை குறிவைத்த உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பிஸ்கோவ் பிராந்தியத்தில் உள்ள விமான நிலையம் பாதிப்படைந்துள்ளது. நான்கு போக்குவரத்து விமானங்கள் சேதமடைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 18 மாதங்களாகிறது. இதில் தற்போது நடைபெற்ற தாக்குதல் மிகப்பெரியதாக கருதப்படுகிறது.

Similar News