ஷாட்ஸ்
பிரியங்கா காந்தி மீது மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிவு
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான அரசு, ஒப்பந்ததாரர்களிடம் 50 சதவீதம் கமிஷன் கேட்பதாக சமூக ஊடகங்களில் வெளியான கடிதம் தொடர்பாக பிரியங்கா காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய பிரதேச மாநில அரசை விமர்சனம் செய்திருந்தார். இதனால் பா.ஜனதா தரப்பில் பிரியங்கா காந்தி மீது புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.