ஷாட்ஸ்

குஜராத் கடலோர பகுதியை தாக்கியது பிபோர்ஜோய் புயல்.. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன

Published On 2023-06-15 21:38 IST   |   Update On 2023-06-15 21:40:00 IST

அரபிக் கடலில் உருவான பிபோர்ஜேய் புயல் இன்று மாலை குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடலோர பகுதியில் கரைகடக்கத் தொடங்கியது. கரைகடக்கும் நிகழ்வு நள்ளிரவு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக குஜராத் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. கூரை வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து காற்றில் பறந்தன.

Similar News