ஷாட்ஸ்
செந்தில்பாலாஜியை நீக்க கோரி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.