ஷாட்ஸ்
செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு
செப்டம்பர் 11-ம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.