Recap 2023

2023 ரீவைண்ட்: நெஞ்சை உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து

Published On 2023-12-26 11:32 GMT   |   Update On 2023-12-26 11:32 GMT
  • ஒடிசாவில் பாலசோர் பகுதியில் நடந்த ரெயில் விபத்தில் சுமார் 300 பேர் பலியாகினர்.
  • எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் எனும் தொழில்நுட்ப கோளாறே விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டது.

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், எஸ்.எம்.வி.டி பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று ஜூன் 2-ம் தேதி மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சுமார் 300 பேர் பலியாகினர். 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் எனப்படும் தொழில்நுட்ப கோளாறு தான் விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு பின், ரெயில்வே அதிகாரிகள் சிலரை கைதுசெய்தனர். இந்தக் கோர விபத்து இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

 


Tags:    

Similar News