புதுச்சேரி
முத்தியால்பேட்டையில் பொதுமக்களுக்கு அன்னதானம்
- நாராயணசாமி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது.
- மணவாளன், நாகராஜ், கோவிந்தன், சதீஷ், முகுந்தன், குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பிறந்தநாளை முன்னிட்டு முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் சார்பில் வட்டார காங்கிரஸ் தலைவர் கே. கிருஷ்ணராஜ் தலைமையில் புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னிலையில் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப் பட்டது.
விழாவில் மாநில பொதுச் செயலாளர் இளையராஜா, மாநில செயலாளர் தாண்டவன், மாவட்ட நிர்வாகிகள் செல்வம், சீதாராமன், அகிலன், புகழேந்தி, மணவாளன், நாகராஜ், கோவிந்தன், சதீஷ், முகுந்தன், குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.