அம்பேத்கர் படம் வைக்க அனுமதிக்க வேண்டும்
- அம்பேத்கரின் சிலை மற்றும் படம் நிச்சயம் இடம் பெற வேண்டும்
- பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி;
கோர்ட்டு வளாகங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் சிலை மற்றும் படம் நிச்சயம் இடம் பெற வேண்டும் என பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் மற்றும் புதுச் சேரியில் உள்ள கோர்ட்டு வளாகங்களில் காந்தி மற்றும் திருவள்ளுவரை தவிர வேறு எந்த தலைவரின் சிலைகளும், உருவப்படங்களும வைக்கப்படக் கூடாது என சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் அனைத்து கோர்ட்டு களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கோர்ட்டுகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே செயல் படுகின்றன. சட்டத்தை பாதுகாப்பது தான் கோர்டின் கடமை. கோர்ட்டில் அம்பேத்கர் சிலை அல்லது புகைப்படம் இடம் பெறுவது அவருக்கு நாம் செய்யும் மரியாதை.
எனவே, கோர்ட் வளாகங்களில் இந்திய அரசியல மைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் சிலை அல்லது உருவப்படம் நிச்சம் இடம் பெற வேண்டும். உயர்நீதிமன்றம் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், அம்பேத்கருக்கு நிச்சயம் விதிவிலக்கு வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.