புதுச்சேரி

100 நாள் வேலை திட்டத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்த காட்சி.

100 நாள் வேலை திட்டம்

Published On 2023-06-10 08:30 GMT   |   Update On 2023-06-10 08:30 GMT
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ வேலை நடக்கிறது.
  • முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் மற்றும் ஊழியர்கள் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கணுவாபேட்டை, உருவையாறு ஆகிய 2 கிராமங்களில் உள்ள சாலை குளம் உள்ளிட்ட பகுதிகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ வேலை நடக்கிறது.

இந்த திட்டத்தை தொகுதி எம்.எல்.ஏவும், வேளாண்துறை அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் தன்ராஜ், முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் மற்றும் ஊழியர்கள் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News