செய்திகள்

வயலோகம் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா

Published On 2016-06-01 14:38 IST   |   Update On 2016-06-01 14:38:00 IST
வயலோகம் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தைச்சார்ந்த வயலோகத்தில் மிகவும்பிரசித்திப்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடை பெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்திற்குரிய திருவிழா கடந்த 22–ந்தேதி அன்று இரவு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

காப்பு கட்டிய நாட்கள்முதல் தினசரி காலை மாலை என இரு வேளைகளிலும் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 29–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பக்தர்கள் பால் கு டம் , காவடி , அலகு குத்தியும், கோழி, கிடா பலியிட்டும், பொங்கல் வைத்தும், குழந்தைகளுக்கு கரும்பு தொட்டில் கட்டியும்,  அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். 30–ந்தேதி தேரோட்ட திருவிழா நடைபெற்றது.

விழாவினை முன்னிட்டு மாலை 4 மணியளவில் முக்கிய பிரமுகர்கள், கோவில்நிர்வாகிகள்,பொதுமக்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அம்மன் தனது பரிவார தெய்வங்களுடன் அமர்ந்த தேர் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாலை 6.15 மணியளவில் மீண்டும் நிலைக்கு வந்தடைந்து. விழாவினை முன்னிட்டு மதியம் அன்னதான விழா மற்றும் இரவு கோவில் முன்பாக உள்ள கலையரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கோவில் நிர்வாகிகள் ,மண்ட கபடிதாரர்கள், பொதுமக்கள் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Similar News